வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-02 09:44 GMT

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு பொது இடங்களில், காலி இடங்களில் கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு காலை மாலை நேரங்களில் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். காற்று மாசுபட்டு சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்