குரங்குகள் தொல்லை

Update: 2022-07-15 16:31 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தேர்பேட்டை சாலைடீச்சர்ஸ் காலனியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக அந்த பகுதி வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்கின்றன. மேலும் மின்சார வயர்களிலும், கேபிள் வயர்களிலும் ஆபத்தான முறையில் தொங்குகின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை.

மேலும் செய்திகள்