விஷ வண்டு கூடு அகற்றப்படுமா?

Update: 2022-09-24 08:54 GMT

சுருளோட்டில் இருந்து பன்றியோடு செல்லும் சாலையோரம் ஒரு தென்னமரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். அவர்களை இந்த விஷ வண்டுகள் தாக்கி வருகின்றன. மேலும் வண்டுகள் கூடு கட்டியிருக்கும் தென்னை ஓலை காய்ந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழும் பட்சத்தில் விஷ வண்டுகள் அந்த பகுதியில் உள்ளவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், சுருளோடு.

மேலும் செய்திகள்