நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2022-09-19 13:39 GMT

சுசீந்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சாய்வுதள பாதையின் மேலே 2 படிக்கட்டுகள் இருந்ததால் சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்வு தளத்தை சரியாக சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்