வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

Update: 2022-09-12 10:20 GMT

உடுமலை அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான திருமூர்த்திமலை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வாகனங்களில் வரக்கூடியவர்களிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பணம் வசூல் செய்யப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. கட்டண சீட்டில் வாகனம் நிறுத்தக் கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு கட்டணம் என்று குறிப்பிடவில்லை. காரணம் கேட்டால் கூற மறுக்கிறார்கள். ரசீதில் தேதியும் இல்லை, கையொப்பமும் இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்