நாகை மாவட்டம் சிக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம் நடைமேடை பகுதிகளில் செடி, கொடிகள் படர்ந்து புதர் போல உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் ரெயில் பயணிகள் ரெயில் ஏறுவதற்கு தினமும் சிரமப்பட்டு வருகின்றனர் . ரெயில் நிலைய வளாகம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,சிக்கல்