மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-08-30 09:29 GMT

இடைக்கோடு பஞ்சாயத்து அலுவலம் அருகில் கண்ணறக்கோடு என்ற இடத்தில் சாலைேயாரம் மிகவும் பழமையான ஒரு மாமரம் நிற்கிறது. இந்த மரத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதன் அருகே குடியிருப்புகள், மின்மாற்றி போன்றவை உள்ளன. காற்று மழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு அதை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.சுதர்சனராஜ், இடைக்கோடு.

88381 82293

மேலும் செய்திகள்