அலுவலகத்தை மாற்றக்கூடாது

Update: 2022-08-29 09:27 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூரில் பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் குடிநீர் கட்டணம், சொத்துவரி கட்ட வசதியாக மண்டல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை ஆசாரிபள்ளம் பெருவிளை பகுதியில் மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது. அப்படி மண்டல் அலுவலகம் மாற்றப்பட்டால் ஆளூர், புன்னவிளை, சுங்கான்கடை, வீராணி, சரல்விளை, தோப்புவிளை, கள்ளியங்காடு, ஐக்கியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, எனவே இந்த அலுவலகத்தை மாற்றும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

-வேணு, ஆளூர்.

9345460838

மேலும் செய்திகள்