கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரப்பதிவு செய்கின்றனர். இந்தநிலையில் கணினி கோளாறு மற்றும் ஆட்கள் பற்றாக்குறை என்றுகூறி நாள் முழுவதும் பொதுமக்களை காக்க வைத்தும், அலைக்கழித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பத்திரப்பதிவுக்கு வருபவர்கள் தங்கள் பணியை சிரமம் இன்றி முடித்துச் செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனகராஜ், குளகிரி, கிருஷ்ணகிரி.