இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்

Update: 2022-08-25 15:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் எக்கூர் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தபடியும் இருக்கின்றன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

-எம்.ராஜேஷ், எக்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்