புதருக்குள் சுகாதார நிலையம்

Update: 2022-08-24 14:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த வரட்டனப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது. அந்த சுகாதார நிலையத்தை சுற்றி செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து கிடக்கிறது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மீண்டும் இந்த துணைசுகாதார நிலையத்தை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பெற மாவட்ட சுகாதார இயக்குனர் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

-சின்னையன், வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்