திருமருகல்ஒன்றியத்தில்சேர்ந்தபத்தம்,பனங்காட்டாங்குடி,படுதார்கொல்லை,அகரக்கொந்தகை,கொத்தமங்கலம்,அனந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு சென்று வர பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி காரைக்கால்-சன்னாநல்லூர் இடையே பனங்காட்டாங்குடி வழியாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,பனங்காட்டாங்குடி.