சரியாக மூடப்படாத பள்ளம்

Update: 2024-07-07 20:18 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சி நந்திபெண்டாவில் இருந்து பூம்பள்ளம் வழியாக கிட்டபையனூர் செல்லும் தார் சாலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. சாலையை சீர் செய்யவில்லை. அந்தச் சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சம்பத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், வெலக்கல்நத்தம்.

மேலும் செய்திகள்