அரக்கோணம் அவுசிங் போர்டு பிரதான சாலையில் மரங்களின் கிளைகள் மின் கம்பிகளில் உரசியபடி இருந்ததை வெட்டி, அதே இடத்திலேயே போட்டு விட்டனர். அவை பல வாரங்களாக அப்புறப்படுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அவுசிங் போர்டில் இருந்து கணேஷ் நகர் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்றவும், சாலையைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்ச்செல்வன், அரக்கோணம்.