பண்ருட்டி லிங்க்ரோடு சாலையின் ஓரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் குப்பை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.