திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் மின்மயானம் உள்ளது. இந்த மின்மயானத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை நகராட்சியினர் முறையாக அகற்றாததால், குப்பைகள் காற்றில் பறந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்கிறது. சிலர் அந்த குப்பைகளை அவ்வபோது தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், திருப்பத்தூா்.