ஓடையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2026-09-06 15:35 GMT

ஏற்காடு மலைப்பாதையில் இருந்து ஏராளமான ஓடைகள் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு செல்கிறது. இதில் வலுக்குப்பாறை ஓடை கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக கன்னங்குறிச்சி புதுஏரிக்கு செல்லும் வழியில் தடுப்பணை உள்ளது. இதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் சிலர் கோழிக்கழிவுகளை ஓடையில் கொட்டுவதால் பொதுமக்கள் அந்த பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்