திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பகுதியில் மக்கள் குப்பைகளை சாலையில் ஓரத்திலேயே வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில சமயம் காற்றில் குப்பைகள் சாலையில் பறக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.