மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளம் அன்பு நகர் 2-வது தெருவில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், மற்றும் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?