குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2026-07-19 19:39 GMT

பேரணாம்பட்டு-ஆம்பூர் நெடுஞ்சாலையில் சாலப்பேட்டை பகுதியில் பெட்ரோல் பங்க் எதிரில் கடந்த ஒரு ஆண்டாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்தக் குப்பையை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அந்தக் குப்பைகள் காற்றில் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தில் இனிமேல் குப்பைகளை கொட்டாமல் தடுக்க எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்