குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2026-09-13 07:08 GMT

செங்கல்பட்டு ஊரப்பாக்கம் பகுதியில் முத்துவேல்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாமல் இருக்கின்றன. ஏற்கனவே வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளையும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதனால் பிரதான சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு நடவடிக்கை எடுத்து, முக்கிய தெருக்கள், சாலையோரங்களில் குப்பைத் தொட்டிகளை நிறுவி அதில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் உரிய நேரத்தில் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்