குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2022-10-23 12:35 GMT

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் எதிரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் உள்ளது. இதன் அருகில் மாதக்கணக்கில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. அந்த இடத்தில் உள்ள நிழற்கூரையின் அடியில் உள்ள இருக்கையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முதியோர்கள் உள்ளிட்ட பலர் அமர்ந்து ஓய்வு எடுத்து வருகின்றனர். குப்பைகள் அதிகளவில் நாள் கணக்கில் தேங்கி கிடப்பதால் அந்த இடத்தில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள குப்பையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லிங்கம், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்