ஓசூர் அலசநத்தம்-முத்தாலி சாலையில் பிஸ்மில்லா நகர் அடுத்துள்ள வாகை ஓம்ஸ் லே அவுட் எதிராக சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டுப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்கலாமே!