பண்ருட்டி ரெயில் நிலையம் செல்லும் சாலையின் இருபுறமும் அதிகளவில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் கோழி இறைச்சிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.