மதுரை அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?