கடமலைக்குண்டு வைகை ஆற்றுப்பாலம் அருகே சாலையில் இறைச்சிக்கழிவுகள் வீசப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகளை அகற்றுவதுடன் அவற்றை கொட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள்,