விருத்தாசலம் பெரியார் நகரில் பாவேந்தர் தெரு சந்திப்பில் தினசரி நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏற்படும் புகையால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.