ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பொன்விளையில் கரையாங்குளக்கரை வழியாக ஆனைக்குழிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சிலர் குப்பைகள் மற்றும் இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரம் கொட்டபட்டுள்ள கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, ரீத்தாபுரம்.