பள்ளிகொண்டா பேரூராட்சி அகரம்சேரி கிராமம், ஏரிகள், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மருத்துவக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் அதை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இரவில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதாப், அகரம்சேரி.