ஈரோடு ஒன்றியம் எலவமலை கிராமம் கவுந்தப்பாடி மெயின் ரோடு பெரியார் நகரில் மயானம் உள்ளது. இங்கு ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி தீ வைக்கிறார்கள். இதனால் எழும் கடும் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அருகில் பள்ளிக்கூடம், கோவில் உள்ளது. மேலும் கோழி கழிவுகளையும் சிலர் கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க அதிகாாிகள் முன்வருவார்களா?