சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2026-06-21 13:17 GMT

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி, இரட்டை பிள்ளையார் கோவில் சாலையோரத்தில் நள்ளிரவு நேரங்களில் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைக் கழிவுகளை மூட்டைகளாக கொட்டிச் செல்கின்றனர். இக்குப்பைகளை ஆடு, மாடுகள் கிளறி சாலையின் பாதையிலேயே பரப்புவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்