சங்கராபுரம் அருகே திருவண்ணாமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் அதிகளவில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அவ்வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாாிகள் மருத்துவக்கழிவுகளை அகற்றுவது மட்டுமின்றி அதனை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.