கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?

Update: 2022-11-23 16:56 GMT

ஆரணி கொசப்பாளையம் வேதபுரீஸ்வரர் கோவில் தெரு திருப்பூர் குமரன் தெரு சந்திப்பில் கட்டிட கழிவுகள், ஜல்லி, மணல் ஆகியவை வெளிப்புறத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி அலுவலர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. கனரக வாகனங்கள் தெருவுக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கட்டிட அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், ஆரணி.

மேலும் செய்திகள்