ஈரோடு கொங்கு நகர் 3-வது வீதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த வழியாக சுற்றித்திரியும் தெருநாய்கள் குப்பைகளை இழுத்து ரோட்டில் போடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றவும், கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.