குப்பைக்கழிவுகளை தீயிட்டு கொளுத்தும் அவலம்

Update: 2026-07-05 19:05 GMT

ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உரம் தயாரிக்கும் கிடங்குக்கு அனுப்பாமல் நகரின் எல்லைப் பகுதிகளான ஏ.சி.எஸ்.கார்டன் அருகே, கமண்டல நாகநதி ஆற்று பகுதி, முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு அருகே, சேவூர் பைபாஸ் சாலை, வி.ஏ.கே. நகர் ஆற்று மேம்பாலம் அருகே, வந்தவாசி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நகர எல்லையில் கோழி இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, ஆரணி.

மேலும் செய்திகள்