சாலையோரத்தில் குவியும் குப்பைகள்

Update: 2026-07-05 09:41 GMT

மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுந்தரராம லே-அவுட் உள்ளது. இந்த பகுதியில், பொது நூலகம், வேளாண் கூட்டுறவு மையம் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இதனால் தினமும், ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நோயாளிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு முன்பாக சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில், பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து தெரு முழுவதும் பரவுவதுடன், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சேகரமாகும் குப்பைகளை தினசரி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமாள், மடத்துக்குளம்.

மேலும் செய்திகள்