சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2026-06-28 13:40 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சித்தப்பட்டி காலனி பகுதியில் பயணிகள் நிழற்குடை அருகிலும், தேசிய நெடுஞ்சாலையோரத்திலும் அதிக அளவில் குப்பைக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாத இந்தக் குப்பைகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுவதால், பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், குப்பைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்