இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர் கோவில் பகுதியில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள், ஒயர்கள், போன்றவை தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் துற்நாற்றமும் வீசுகிறது.பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.