மதுரை நகர் கோவில் பாப்பாகுடி முக்கிய சாலை மற்றும் அதன் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அவ்வழியே கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பாதசாரிகள் இதில் எழும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?