குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-16 17:18 GMT

ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் மெயின் ரோடு ஓரம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. நகராட்சி சார்பில் குப்பைகளை அள்ள தினமும் வண்டிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக குப்பை வண்டி வராததால் அந்த இடம் முழுவதும் குப்பை மேடாக காட்சியளித்து. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவும் நிலை உள்ளது. எனவே சாமியார் மடம் பகுதியில் சாலையோரம் தேங்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் தினமும் அகற்ற வேண்டும்.

-சதீஷ், ஆம்பூர்.

மேலும் செய்திகள்