குப்பைகள், கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-08-13 13:42 GMT

குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் 2 மாதங்களாக அப்படியே உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்குகிறது. மேற்கண்ட சுகாதார சீர்கேடுகளை களைய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு

மேலும் செய்திகள்