பாலத்தின் அடியில் கோழிக்கழிவுகள் கொட்டும் அவலம்

Update: 2023-01-25 12:02 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஊராட்சியில் அமிர்தி செல்லும் சாலையில் சிறு ஆற்றுப்பாலம் உள்ளது. அதன் கீழே சிலர் குப்பைகள், கோழிக்கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வந்து கொட்டி அசுத்தம் செய்கிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆற்றில் குப்பைகள், கோழிக்கழிவுகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.

-த.அரவிந்தன், சோழவரம்

மேலும் செய்திகள்