பாலாற்றில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2022-10-26 11:35 GMT

வேலூர் பாலாற்றில் ஆங்காங்கே மர்மநபர்கள் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்றில், காட்பாடி செல்லும் பாலத்தின் கீழ்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அளவுக்கு அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலாற்றில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்