பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-12 10:27 GMT

பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எனினும், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளிபக்க சுற்றுச்சுவர் அருகே காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளாகவே காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ், திருவண்ணாமலை 

மேலும் செய்திகள்