நடைபாதையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2022-10-05 12:35 GMT

வேலூர் கிருபானந்தவாரியார் சாலை லாங்குபஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் தடுப்புக் கம்பிகள் பதிக்கும் பணி நடைபெறவில்லை. மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அளவுக்கு அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாததால் சாலையில் நடக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் தடுப்பு கம்பிகள் பதித்து அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்