ஊராட்சி பணியாளர்களே குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2023-05-03 17:19 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் உள்ள தில்லை நகர் பகுதியில் ஊராட்சி பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். மேலும் அவர்களே அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஊராட்சி பணியாளர்கள் குப்பைகளை எரிக்காமல் தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், தில்லை நகர். 

மேலும் செய்திகள்