துர்நாற்றத்தால் குழந்தைகள் அவதி

Update: 2026-06-14 10:43 GMT

திருப்பூர் கொங்கு நகரில் ஸ்ரீவெங்கடாசலபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து வைத்து வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அதாவது வீடுகள்தோறும் துப்புரவு பணியாளர்கள் சேகரித்து கொண்டுவரும் குப்பைகளை பள்ளிக்கூடம் முன்பு காலை முதலே சேகரித்து வைக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குப்பை சேகரிக்கப்பட்ட பின் வாகனங்களை வரவழைத்து குப்பையை ஏற்றி அனுப்புகின்றனர். இவ்வாறு சேகரித்து வைக்கப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பள்ளியை விட்டு சற்று தொலைவில் ஏதேனும் காலியிடம் பார்த்து அங்கு குப்பையை சேகரித்து வாகனங்களில் ஏற்றி அனுப்பும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவேண்டும்.

காமாட்சி, திருப்பூர்.

மேலும் செய்திகள்