சுகாதார சீர்கேடு

Update: 2026-08-16 11:11 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரத்தை அடுத்த டி.வி.எஸ்.நகர் மற்றும் கோவலன் நகர் முக்கிய சாலை பகுதியில் உள்ள சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்