மதுரை திருமோகூர் சாலையில் ஒத்தகடை பகுதி சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அதில் சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. மேலும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் அச்சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?