திருப்பூர் பென்னி காம்பவுண்ட் பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் அருகில் பள்ளி உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு குப்பைகள் குவிந்து கிடப்பது இடையூறாக அமைந்துள்ளது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளுக்கு நோய் ெதாற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி மீண்டும் அங்கு குப்பைகள் கொட்டாத வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
-முபாரக் பாஷா, திருப்பூர்.